வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் குஜராத்தில் கைது

அகமதாபாத்: குஜராத் காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை டிஐஜி தீபன் பத்ரன் நேற்று முன்தினம் கூறியதாவது:

அகமதாபாத்தின் ஓதவ் மற்றும் நரோல் பகுதிகளில் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் முகமது சோஜிப், முன்னா காலித் அன்சாரி, அசாருல் இஸ்லாம் அன்சாரி, மொமினுல் அன்சாரி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம்.

இவர்கள் நால்வரும் அகமதாபாத்தில் முஸ்லிம் இளைஞர்களை அல்-காய்தா அமைப்பில் சேருமாறு ஊக்குவித்து வந்துள்ளனர். மேலும் அந்த அமைப்புக்கு நிதி திரட்டி உள்ளனர்.

இவர்களிடமிருந்து போலி அடையாள ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.