தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் போலி சிம்கார்டுகள் முடக்கம் – அதிரடி காட்டும் சைபர் க்ரைம் போலீசார்.!!

தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் போலி சிம்கார்டுகள் முடக்கம் – அதிரடி காட்டும் சைபர் க்ரைம் போலீசார்.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான போலியான சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம்க்கு மத்திய சைபர் க்ரைம் அறிக்கை ஒன்று அனுப்பியது.

அந்த அறிக்கையை ஏற்று மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமாரின் உத்தரவுப்படி சைபர் க்ரைம் எஸ்பி தேவராணி, ஸ்டாலின் மற்றும் அசோக் குமார் உள்ளிட்டோர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டது.

அந்த விசாரணையில், தமிழகத்தில் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிம்கார்டுகள் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை முக அடையாளம் காணும் மென்பொருளை பயன்படுத்தி தரவுகளை ஆய்வு செய்தது.

அப்போது, தமிழகம் முழுவதும் சுமார் 55,982 சிம்கார்டுகள் போலியான முகவரி மூலம் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாநில சைபர் க்ரைம் போலீஸார் சுமார் 55,982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர். 

மேலும், இந்த சிம் கார்டுகள் விற்பனை செய்ததாக விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், போலி சிம்கார்டுகள் விற்பனை செய்ததாக ஐந்து சிம்கார்டு விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து வைசரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.