நாடு முழுவதும் இன்று சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு…!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

1,105 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில் நடைபெறும் தேர்வில் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

காலை 9.30 முதல் 11.30 மணி வரை முதல் தாள் பொது அறிவுத் தேர்வும், பிற்பகலில் 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறி 2-ம் தாள் தேர்வும் நடைபெறுகிறது.

தேர்வை முன்னிட்டு, மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மையங்களுக்குள் தேர்வர்கள் செல்போனை எடுத்துச்செல்லவும், பேஜர், பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.