Keerthy Suresh: திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி: அந்த 'தக்' பதில் தான் அல்டிமேட்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Keerthy suresh temple visit: திருப்பதி கோவிலுக்கு சென்ற இடத்தில் கீர்த்தி சுரேஷ் அளித்த பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

​கீர்த்தி​தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் படுபிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா படத்தில் நடித்து வந்தார் கீர்த்தி. இந்நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது. ஹீரோயினை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் அந்த படத்தை கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாராட்டு​விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!​​திருப்பதி​ரகு தாத்தா பட வேலையை முடித்த கையோடு தன் அம்மா, அப்பா, அக்கா ரேவதியுடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கீர்த்தியை பார்த்ததும் செய்தியாளர்கள் அங்கு கூடிவிட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெலுங்கில் பதில் அளித்தார்.

​தமிழ்​கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் பேச அங்கிருந்த ஒருவரோ, மேடம் தமிழில், தமிழில் பேசுங்கள் என்றார். அதை கேட்ட கீர்த்தியோ சிரித்துக் கொண்டே நான் திருப்பதியில் இருக்கேனே என பதில் அளித்தார். இது தான் செம தக் பதில். கீர்த்தி கெத்து தான் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி.
தக்​​​தங்கை​போலா ஷங்கர் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார் கீர்த்தி. அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த போலா ஷங்கர். அந்த படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்திருக்கிறார் கீர்த்தி. ஒரு முன்னணி ஹீரோயினாக இருந்து கொண்டு இப்படி தங்கை கதாபாத்திரத்தில் துணிந்து நடித்திருக்கிறார். தமிழில் கூட அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார்.

​இமேஜ்​முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இந்த நேரத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தால் இமேஜ் பாதிக்கப்படும் என்று கீர்த்தி சுரேஷுக்கு பயமே இல்லை. கதாபாத்திரம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதனால் இமேஜ் பாதிக்காது என நம்புகிறார் கீர்த்தி. அந்த நம்பிக்கையில் தான் துணிந்து தங்கை கதாபாத்திரங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.
​திருமணம்​கீர்த்தி தன் படங்களில் பிசியாக இருக்க அவருக்கும், துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஃபர்ஹானுக்கும் விரைவில் திருமணம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி தீயாக பரவியது. ஃபர்ஹானின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் கீர்த்தி. அதன் பிறகே கீர்த்தியும், ஃபர்ஹானும் பல ஆண்டுகளாக காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் என்று பேச்சு கிளம்பியது.

​Keerthy Suresh:என்னது கீர்த்தி சுரேஷுக்கும், துபாய் தொழில் அதிபர் ஃபர்ஹானுக்கும் விரைவில் திருமணமா?

​வதந்தி​திருமணம் குறித்து வெளியான செய்தியை பார்த்த கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் கூறியதாவது, அவர் என் நண்பர். என் வருங்கால கணவரை நேரம் வரும்போது நானே அறிவிக்கிறேன். ஒரு முறை கூட சரியாக கண்டுபிடிக்கவில்லையே என கலாய்த்திருந்தார். ஃபர்ஹானும், கீர்த்தி சுரேஷும் நண்பர்கள் தான். அதை தாண்டி வேறு எதுவும் இல்லை என அவரின் அப்பாவும் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

​Keerthy Suresh:அவர் என் நண்பன், என் காதலரை நேரம் வரும்போது காட்டுகிறேன்: கீர்த்தி சுரேஷ்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.