Turning challenges into opportunities Barley.,: Speaker | சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் பார்லி.,: சபாநாயகர்

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதாவது: ஒட்டு மொத்த நாடும் இன்றைய தருணத்தை கவனித்து வருகிறது. 2.5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டது பெருமை அளிக்கிறது. நமது ஜனநாயகம் காலத்திற்கு ஏற்றாற் போல் வலுப்பெற்று வருகிறது

அமிர்த காலகட்டத்தில் இந்தியாவின் பெருமை, உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது. சர்வதேச மற்றும் உள்ளூர் சவால்களை, வாய்ப்புகளாக மாற்றும் ஆற்றல் நமது பார்லிமென்டிற்கு உள்ளது. நமது வலிமையான எதிர்காலத்திற்கு ஜனநாயகம் அடிப்படையாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது பலம். புதிய பார்லிமென்ட், புதிய சூழல் மற்றும் புதிய சிந்தனைகளை உருவாக்கும் என நம்புகிறேன். நமது பார்லிமென்ட் அமைப்பின் கொள்கைகள், நம்மை முன்னெடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.