வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம்.. திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது..!

கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வீட்டில் கடந்த 26-ம் தேதி சோதனைக்காக வந்த அதிகாரிகளிடம் அங்கு திரண்டிருந்த திமுகவினர் அடையாள அட்டை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் வந்த காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக கவுனசிலர்கள் 20வது வார்டு லாரன்ஸ், 16-வது வார்டு பூபதி உள்ளிட்ட 10 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.