Leo: வாரிசு நிலைமை லியோவிற்கு வந்துவிடக்கூடாது..உத்தரவிட தளபதி..உஷாரான லோகேஷ்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே லோகேஷை கொண்டாடி வருகின்றது. மேலும் விக்ரம் படத்தையடுத்து லோகேஷ் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி லியோ மூலம் மீண்டும் இணைந்தது.மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்த்திருந்த லோகேஷ் லியோ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலிலேயே உருவாக்கி வருகின்றார். எப்படி உலகநாயகனை வைத்து விக்ரம் படத்தை தன் பாணியில் லோகேஷ் இயக்கினாரோ அதே போல லியோ படத்தையும் லோகேஷ் இயக்கி வருகின்றார்.

லியோ

இதுவே படத்தின் எதிர்பார்ப்பிற்கு முழு காரணமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலும் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. பலவருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடிக்கின்றார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கௌதம் மேனன், மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் நடித்து வருகின்றனர்.

Ajith: விடாமுயற்சி படத்தில் முதலில் எடுக்கப்போவது இந்த காட்சிகள் தானாம்..அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகின்றது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற இருக்கின்றது.

உத்தரவிட்ட விஜய்

இந்த சமயத்தில் தான் விஜய் லோகேஷ் மற்றும் லியோ படக்குழுவிடம் ஸ்ட்ரிக்டான கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். அதாவது லியோ படத்திலிருந்து எந்த ஒரு புகைப்படமோ, வீடியோவோ இணையத்தில் லீக்காக கூடாது என கண்டிஷன் போட்டுள்ளாராம் தளபதி. ஏனென்றால் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் மற்றும் வாரிசு படங்களின் படப்பிடிப்பின் போது இதுபோல பல புகைப்படங்களும், காட்சிகளும் இணையத்தில் கசிந்தன.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இது படக்குழுவிற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியது. எனவே இதுபோன்ற ஒரு நிலைமை லியோ படத்திற்கு வந்துவிடக்கூடாது என கருதிய விஜய் லோகேஷை உஷாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளாராம். எனவே தற்போது லியோ படப்பிடிப்பில் லோகேஷ் ஸ்ட்ரிக்ட்டாக ரூல்ஸ்களை போட்டுள்ளாராம்.

படப்பிடிப்பில் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது, படப்பிடிப்பிற்கு வெளிநபர்கள் யாரும் வரக்கூடாது என்பது போன்ற பல கண்டிஷன்களை போட்டு ஸ்ட்ரிக்ட்டாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றார் லோகேஷ்.

மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கசியாமல் இருக்க அதனை கண்காணிக்க ஒரு ஐந்து பேர் கொண்ட குழுவையும் படக்குழு நியமித்துள்ளதாம். எனவே இதையும் மீறி எந்த ஒரு விஷயமும் லியோ படப்பிடிப்பில் இருந்து லீக்காகாது என்றே தெரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.