SP Balasubrahmanyam: 5 வருஷமா எஸ்.பி.பி.க்காக காத்திருந்த ஏ.ஆர். ரஹ்மான்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
காலையில் எழுந்ததில் இருந்து தூங்கச் செல்லும் வரை அனைத்து மூடுக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் இருக்கிறது. எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் எஸ்.பி.பி.யின் தேன் குரலில் பாடல்களை கேட்டால் ரிலாக்ஸாகிவிடலாம்.

“Please..இத மட்டும் வெளிய சொல்லாதீங்க.- கெஞ்சிய சரத்குமார்!
தன் பாடல்களால் பலரின் வாழ்க்கையை மாற்றிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 2020ம் ஆண்டு செம்படம்பர் மாதம் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோ தான் கடைசி என்பது தெரியாமல் போய்விட்டது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நான் நலமாக இருக்கிறேன். ஓய்வெடுக்தத் தான் மருத்துவமனைக்கு வந்தேன். யாரும் போன் செய்ய வேண்டாம் என்றார். ஆனால் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என்று உறுதியாக சொன்ன எஸ்.பி.பி. கடைசி வரை வீடு திரும்பவே இல்லை.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் இறந்து 3 ஆண்டுகள் ஆகிறது என்றே நம்ப முடியவில்லை. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 77வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார்.

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று பாடினார் எஸ்.பி.பி. அதை தான் செய்து கொண்டிருக்கிறார். எஸ்.பி.பி.யின் பாடல்களை கேட்கும் போது அவர் நம்முடன் இல்லை என்கிற எண்ணமே வருவது இல்லை. நம்ம எஸ்.பி.பி. என்றுமே நம்முடன் தான் இருப்பார் என்கிற உணர்வே ஏற்படுகிறது.

இறந்தும் பிறரை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளான இன்று அவரின் பாடல்கள் பற்றி ரசிகர்களும், பிரபலங்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சொர்க்கத்தில் இசை கச்சேரி நடத்திக் கொண்டிருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் அண்ணன் எஸ்.பி. பி. பற்றி தம்பி
கமல்
ஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து என தெரிவித்துள்ளார்.

கமலின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, எஸ்.பி. பி. தன் இசையால் வாழ்ந்து கொண்டே இருக்கிறார், இருப்பார் என கூறியுள்ளனர்.

Kamal Haasan: கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது, அதனால் தான்…: கமல்

எஸ்.பி.பி.யின் கடைசி ஆசை ஒன்று நிறைவேறாமல் போய்விட்டது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. அவரும், ரஹ்மானும் சேர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டார்கள். ஆனால் அதற்குள் எஸ்.பி.பி. இறந்துவிட்டார். அவரின் அந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.

எஸ்.பி. பி. பற்றி முன்பு ஏ.ஆர். ரஹ்மான் கூறியதாவது,

எஸ்.பி. பி. ஒரு சூப்பர்மேன். 40 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் 20 பாடல்கள் தான் பாடியிருப்பார்கள். ஆனால் அவர் அப்படி இல்லை. பிரமிக்க வைத்தார் எஸ்.பி.பி.

நான் இசைக் கலைஞராக தெலுங்கு திரையுலகில் வேலை பார்த்த 5 ஆண்டுகளும் எஸ்.பி.பி.க்காக காத்திருந்தது தான். தெலுங்கில் ரிலீஸான அனைத்து பாடல்களையும் அவர் தான் பாடினார். காலை 7 மணிக்கு சம்பந்தப்பட்ட ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்று இசைக் கருவிகளை செட் செய்து, ஒத்திகை பார்ப்போம். மதியம் 12 மணியாகியும் காத்திருப்போம்.

என்னாச்சு என்று யாரிடமாவது கேட்டால், எஸ்.பி. பாலசுப்ரமணியம் வர வேண்டும். அவர் இளையராஜாவுக்காக பாடிக் கொண்டிருக்கிறார் என்பார்கள். அதை முடித்துக் கொண்டு 12.45 மணிக்கு ஸ்டுடியோவுக்குள் வருவார். 10 நிமிடத்தில் பாடலை கற்றுக் கொண்டு மதியம் 1.15 மணிக்கு எல்லாம் பாடி முடித்துவிட்டு கிளம்பிவிடுவார். அப்படித் தான் அவரை தினமும் பார்த்திருக்கிறேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.