தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக கல்வி பயிலலாம்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுகிறது. தமிழக அரசின் உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.