லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் அரியவகை சுமத்ரா புலிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடி குதூகலம்

லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் அரியவகை சுமத்ரா புலிக்குட்டிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடின.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் புலிகள், வனப்பகுதிகளில் தற்போது 300 மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள சுமத்ரா புலிக்குட்டிகள், தாய் புலியின் மேற்பார்வையில் குதூகலமாகத் தண்ணீரில் விளையாடி பொழுதுபோக்கின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.