அப்பாடா… ஒருவழியா பருவமழை தொடங்கியிருச்சு… இனிமே சில்சில் கூல்கூல்தான்!

கேராளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழைநாட்டின் பெரும்பான்மையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மழையாக தென்மேற்கு பருவ மழை உள்ளது. தென் மேற்கு பருவமழையால் மழை மறைவு பிரதேசங்கள் ஆறுகளின் மூலமாகவும் மழை நிழல் பகுதிகள் குறைந்தபட்ச மழையின் மூலமும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. கொளுத்தும் வெயிலின் கோடைக்கால இறுதியில் தொடங்குவதால் தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
​ திருப்பதி ஏழுமலையானுக்கு திறக்கப்பட்ட 6வது கோவில்… ஜம்மு – காஷ்மீரில் பிரமாண்டம்!​பருவமழை தாமதம்ஆண்டுதோறும் ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமானது. இதனால் ஜூன் 4 அல்லது 5 ஆம் தேதிகளில் பருவ மழை தொடங்கும் என அறிவித்தது இந்திய வானிலை மையம். ஆனால் அந்த தேதிகளிலும் பருவமழை தொடங்காமல் தாமதமாகி வந்தது.​ திருப்பதி கோவிலில் ஆதிபுருஷ் இயக்குநரிடம் முத்தம் வாங்கிய கிரித்தி சனோன்!​
புயலால் பாதிக்கப்படும்இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயலால் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பிபர்ஜாய் புயலால் கேரளாவில் பருவமழையின் தீவிரம் பாதிக்கப்படும் என்றும் இதனால் கேரளாவில் அதன் ஆரம்பம் “லேசானதாக” இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
​ தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன சூப்பர் தகவல்.. என்னன்னு பாருங்க!​பருவமழை தொடக்கம்மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் பருவ மழை தொடங்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் ஒருவழியாக கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தென் அரபிக்கடலின் எஞ்சிய பகுதிகள் மற்றும் மத்திய அரபிக்கடலின் சில பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது.
​ பலத்தை காட்ட போகிறோம்… பிராமணர்களுக்காக தனிக்கட்சி… அதிரடி காட்டும் எஸ்வி சேகர்!​வானிலை மையம்மேலும் தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள், குமரி முனை பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கின் மேலும் சில பகுதிகள், மத்திய மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் மே 20 ஆம் தேதியே தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது.​ பிபர்ஜாய் புயலால் ‘பேரழிவு’ யாருக்கு? வானிலையை புரட்டிப்போட போகும் முக்கியமான 3 நாட்கள்!​
இந்த ஆண்டு தாமதம்ஆனால் கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய பருவ மழை 8ஆம் தேதியான இன்றுதான் தொடங்கியுள்ளது. ஜூன் 5ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கினால் அது இயல்பானதாகவே கருதப்படும். ஆனால் 5ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் பருவமழை தாமதமானதாக கூறப்படும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.