சென்னை தம்பதி 20 வயது மகளுடன் கேரளாவில் தற்கொலை… சிக்கிய கடிதத்தால் பரபரப்பு!

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த திருப்புணித்துறையை சேர்ந்தவர் சந்தோஷ் பீட்டர். 51 வயதான இவருக்கு 50 வயதில் சுமி என்ற மனைவியும் 20 வயதில் ஐரின் என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ் பீட்டர் தொழில் நிமித்தமாக கடந்த பல ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சந்தோஷ் பீட்டர் கடந்த வாரம் தனது குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றார். திருச்சூரில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய சந்தோஷ் பீட்டர், 8 ஆம் தேதி காலை ரூமை காலி செய்வதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னப்படி நேற்று காலை அவர் ரூமை காலி செய்யவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் அவரது ரூம் கதவை தட்டியுள்ளனர்.

ராமருக்கு மீசை இருக்குமா? கர்ணன் போல இருக்கார்… ஆதிபுருஷை விமர்சித்த கஸ்தூரி!

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சந்தோஷ் பீட்டர் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி வாயில் நுரையுடன் படுக்கையில் சடலமாக கிடந்தார். அவர்களின் மகள் குளியலறையில் தூக்கிட்டு சடலமாக இருந்தார்.

கேடி ராகவனை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்க ரூ. 7 லட்சம் செலவு… பகீர் கிளப்பும் எஸ்வி சேகர்!

மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தோஷ் பீட்டர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தங்களின் சொந்த ஊர் கேரளா என்றாலும் பல ஆண்டுகளாக சென்னையில்தான் வசித்து வந்ததாகவும் இதில் பலருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் பேக்கேஜ்… ஐஆர்சிடிசியின் அதிரடி ஸ்பெஷல் ஆஃபர்!

அப்போது தங்களிடம் பணம் வாங்கிய சிலர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி மீள முடியாமல் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கேரள போலீசார், சென்னையில் உள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தோஷ் பீட்டர் குடும்பத்தை ஏமாற்றிய அந்த மர்ம நபர்கள் யார் என விசாரிக்கவும் தொடங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.