இந்திய மாணவர்களை நாடு கடத்த கனடா அரசு திட்டம்.. மத்திய அரசின் தலையீட்டால் நாடு கடத்துவதற்குத் தடை

கனடாவில் உயர் கல்வி படிக்கச்சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனடா தடை விதித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்வி படிக்கச் செல்ல ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர், போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

இந்த போலி சேர்க்கை கடிதங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதையடுத்து அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ. என்று அழைக்கப்படுகிற கனடா எல்லை பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்தது.

இதுகுறித்து தகவலறிந்த மத்திய அரசு, கனடா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.