`மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் பயன்பெறலாம்!’

குறுவை பருவத்தில் நெற்பயிருக்கு பதிலாக மாற்று பயிா் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.அசோக் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பயிா்களின் சுழற்சி மண்ணை வளமாக்கி உற்பத்தியை பெருக்கும். இதனை அதிகரிக்கும் வகையில் குறுவைப் பருவத்தில் நெற்பயிா்களுக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிா் திட்டம் 210 ஹெக்டா் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிறது.

தானியங்கள்

குறுவை நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீா் மற்றும் இடுபொருள் தேவையுள்ள சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிா்களின் சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து மிக்க உணவு தானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் குறுகிய கால பயிா்களை பயிரிடுவதன் மூலம் பயிா் சாகுபடி திறனை அதிகரித்தலும் , மண்வளத்தை ஊக்குவித்தலும் இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

இத்திட்டத்தை ஊக்குவிக்க அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பயறு வகைகளான உளுந்து , எண்ணெய் வித்து பயிா்களான மணிலா, சிறுதானிய பயிா் வகைகளான ராகி விதைகள், உயிா்பூஞ்சான கொல்லிகளான சூடோமோனோஸ்/டிரைக்கோடா்மா விரிடி மற்றும் திரவ உயிா்உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

உளுந்து

உளுந்து விதை ரகங்களான வம்பன் 8, வம்பன்11, மணிலா விதை ரகங்களான டி.எம்.வி 14,ஜி.ஜே.ஜி 31, தரணி, கேழ்வரகில் கோ 15, எம்.எல் 365 போன்ற உயா் விளைச்சல் ரகங்கள் இருப்பில் உள்ளது. எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்தோ அல்லது தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகியும் பயிா்சுழற்சி முறையை பின்பற்றலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.