கரையைக் கடந்தபின் வலுவிழந்தது பிபர்ஜோய் புயல்… ராஜஸ்தானை நோக்கி நகர்ந்த புயலால் இருமாநிலங்களிலும் பலத்த மழை

பிபர்ஜோய் புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் கரையைக் கடந்து அதிதீவிர புயலில் இருந்து தீவிரப் புயலாக வலுவிழந்து ராஜஸ்தானை நோக்கி நகர்ந்தது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை மீட்டு வர நிவாரணக் குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சாய்ந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருப்பதால், அவர்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று கட்ச் பகுதியில் நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.