தெர்மாகோல் கடற்கரை | புதுப்பிக்கப்படும் நெல்லையப்பர் தேர் |ஸ்குவாஷ் உலகக் கோப்பை – News in photos

ஈரோடு: ஆனைக்கல் பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் வாகனங்களை எஸ்.பி .ஜவஹர் ஆய்வு செய்தார்
புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலை சேர்ந்த 135 ஆசிரியர்கள் குழந்தைகளுடன் சட்டப்பேரவை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: எம்.பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு செய்தியை சமூக ஊடகத்தில் வெளியிட்ட வழக்கில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது.
சென்னை: பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கழிவுகளால் சூழ்ந்துள்ள காசிமேடு கடற்கரை
சென்னை: ஸ்குவாஷ் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி எகிப்து உலக கோப்பையை வென்றது.
புதுச்சேரி: சட்டப்பேரவை வளாகத்தில் தீ குளிப்பு முயற்சியை அடுத்து துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர் திருவிழாவிற்காக தீயணைப்பு வீரர்களால் சுத்தம் செய்யப்படும் தேர்
நாகர்கோவில்: தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழாவில் கலை திறனை வெளிப்படுத்தி சாகசம் செய்த மாணவர்கள்.
நாகர்கோவில்: தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
சேலம்: கருமந்துறையில் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராயம்
சேலம்: மேச்சேரி பத்திரகாளி அம்மன் ஆனி அமாவாசையை முன்னிட்டு சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளித்தார்
தூத்துக்குடி: சமூகப்பாதுகாப்பு துறை சார்பில் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர்: மோசமான நிலையில் இருக்கும் சிஎம்சி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இணைக்கும் பிரதான சாலை
விருதுநகர்: 9வது சர்வதேச யோகா தினம் முன்னிட்டு
108 சூரிய நமஸ்காரத்திற்காக ஆஸ்கார் உலக சாதனை செய்த பள்ளி மாணவ மாணவிகள்
விருதுநகர்: ஆனி அமாவாசை முன்னிட்டு சதுரகிரியில் மலையேறும் 1000 கணக்கான பக்தர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.