பிரிஜ் பூஷணுக்கு எதிரான புகார்களுக்கு ஆதாரம் சிக்கியது: போலீஸ்

பிரிஜ் பூஷணுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஜ் பூஷண் மீது ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே, பிரிஜ் பூஷண் மீதான 6 புகார்களில் 4 புகார்களுக்கு போதிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் ஆதாரங்கள் சேகரிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு போட்டி தொடர்கள், பரிசளிப்பு நிகழ்ச்சிகள் என 3 முக்கியமான வீடியோக்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், வழக்கில் இதுவரை 80 பேர் வரை விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.