Vishal: தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.. டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து நடிகர் விஷால்.!

கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள சம்பவம் மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலை செய்து இறந்துள்ள டிஐஜி விஜயகுமார் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஐஜி விஜயகுமார் இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஐஜியின் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடந்தியும் வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

டிஐஜி விஜயகுமார் தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் போலீசார் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Maamannan: ‘மாமன்னன்’ படக்குழுவின் சூப்பர் பிளான்: எகிற போகும் வசூல்.!

இந்நிலையில் விஜயகுமார் மறைவு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் விஷால். அதில், ‘விஜயகுமார் ஐபிஎஸ் (கோயம்புத்தூர் டிஐஜி) தற்கொலை செய்து கொண்டார் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி இது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

நான் அவரை பலமுறை சந்தித்துள்ளதால் இந்த இழப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவரது இறுதி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Maaveeran: ‘மாவீரன்’ படத்துக்கு நோ சொன்ன ரஜினி, கமல்: மெஹா ட்விஸ்ட் வைத்துள்ள படக்குழு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.