டிஐஜி விஜயகுமாரை தற்கொலைக்கு தூண்டியது யார்? போன் ஆய்வு செய்யப்பட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து பேசிய அண்ணமாலை, காவல்துறையில் உள்ள அனைவருக்கும் மன அழுத்தம் உச்சக்கட்டத்தில் உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காவல் துறையில் உள்ள பணியிடங்களை நிரப்பினாலே அழுத்தம் குறைந்து விடும் என்றார்.

இப்பொழுது காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அழுத்தம், அரசியல் வாதிகளின் அழுத்தம் அதிகம் உள்ளது என்றும் அண்ணாமலை கூறினார். முதல்வர் போர்க்கால அடிப்படையில் 10,000 பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் 2006 இல் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் காவல்துறையில் உள்ளவர்களுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும் என்றும் டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் டிஐஜி விஜயகுமாரை தற்கொலைக்கு தூண்டியது யார்? அவரிடம் யாரெல்லாம் போனில் பேசினார்கள் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

எந்த உயர் அதிகாரிகளிடம் விஜயகுமார் பேசினார்? அவருடைய ரிப்போர்ட்டிங் அதிகாரி யார்? அவர்களிடம் என்ன பேசினார் என்பது குறித்த போன் பேச்சுக்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் இருந்த பிறகு ஒரு மனிதரை கொச்சைப்படுத்தக் கூடாது என்ற அண்ணாமலை அவருக்கு ஓசிடி பாதிப்பு இருந்தது என்று உயர் அதிகாரிகள் கூறுவது சரியாக இருக்காது என்றார்.

மேலும் டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு குரூப் ஏ பிரிவில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் 10000 பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். ஐபிஎஸ் அதிகாரிகள் மனதளவில் வீக்கானவர்கள் அல்ல என்ற அண்ணாமலை, உயர் அதிகாரிகளுக்கு நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் உள்ளது என்றார். மேலும் டிஐஜி விஜயகுமாரின் போனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலிறுயுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.