டில்லி எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் புயலைக் கிளப்பியது. இன்று மக்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எனவே மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பிறகு அவை கூடியதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையொட்டி மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வரும் திங்கட்கிழமை கூட […]