இந்த நம்பரில் இருந்து கால் வந்தா எடுக்காதீங்க… சிக்கினால் அவ்வளவு தான்!

+92 Mobile Number Online Scam: இந்தியாவில் தற்போது ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை திருடுவதற்கு பல்வேறு புதிய வழிகளை பயன்படுத்துகின்றனர். 

ஓடிபி மோசடி, ஸ்கேனர் மோசடி போன்ற வைரலான மோசடிகளுக்கு மத்தியில், தற்போது புதியதாக மற்றொரு ஆன்லைன் மோசடி புழக்கத்திற்கு வந்துள்ளது எனலாம். அதாவது, இதில் மோசடி செய்பவர்கள் உங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே வந்து உங்களை தாக்குவார்கள்(!). உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு, அதன் வழியே அழைத்து உங்களின் பணம் மற்றும் வங்கி விவரங்களை கேட்டு உங்களையே ஏமாற்றிவிடுவார்கள். குறிப்பாக, இந்த மோசடி வலையில் சினிமா பிரபலங்களும், இணைய பிரபலங்களும் தான் அதிகம் சிக்குகின்றனர்.  

மோசடி வலை

இந்த மோசடி செய்பவர்களின் தொலைபேசி நம்பர்கள் +92 என்ற நாட்டின் குறியீட்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இலவச ஐபோன்கள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருள்களை பரிசாக வழங்குவதாக கூறி உங்களை அவர்களின் மோசடி வலையில் சிக்கவைக்க முயற்சிப்பார்கள். 

இதுபோன்ற சம்பவம் சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. துபாயில் இருந்து இலவச ஐபோன் 14 மாடல் ஸ்மார்ட்போனை பரிசாக வழங்குவதாக இன்ஸ்டாகிராமில் மூலம் ஒரு நபர் தொடர்புகொண்டுள்ளார். இதை நம்பிய அந்த பயனர், அந்த சைபர் மோசடிக்காரர்களிடம் 7 லட்ச ரூபாயை இழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 

UPI வழி பண பரிமாற்றம்

அந்த மோசடி நபர்கள் பாதிக்கப்பட்ட நபரின் முதலில் இப்படி தான் கூறியுள்ளனர்.”வாழ்த்துக்கள்! நீங்கள் படே பாய் மற்றும் சோட் பாய் வழங்கும் இலவச ஐபோன் 14 மாடல் மொபைலை வென்று உள்ளீர்கள். அதனை பெறுவதற்கு சிறிய கட்டணமாக 3 ஆயிரம் ரூபாயை செலுத்துங்கள் போதும. UPI-ஐ பயன்படுத்தி இங்கு கொடுக்கப்பட்ட எண்ணுக்கு பணத்தை செலுத்திவிடுங்கள்” என்று இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளனர். 

சுமார் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் தனக்கு இலவசமாக வழங்கப்படுவதாக நினைத்து உற்சாகமடைந்த அந்த நபர், மோசடிக்காரர்களால் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அவரது UPI மூலம் ரூ.3 ஆயிரம் செலுத்தியுள்ளார். இதனை அவர்கள் டோக்கன் கட்டணம் என சொல்லியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வங்கி பேலன்ஸ் காலி

இதற்கு அடுத்த நாளே, அந்த மோசடிக்காரர்கள் அவரை மீண்டும் தொடர்பு கொண்டு, அவருடைய ஐபோன் டெலிவரிக்கு தயாராக இருப்பதாகவும், பார்சல் சூரத் விமான நிலையத்திற்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். பின்னர், அந்த மொபைலை டெலிவரி செய்வதற்கு கூடுதலாக 8 ஆயிரம் ரூபாயை அந்த நபரிடம் கேட்டுள்ளனர். அந்த நபர் எவ்வித சந்தேகமும், கேள்வியும் இன்றி அப்படியே அந்த 8 ஆயிரம் ரூபாயையும் UPI மூலம் செலுத்தியுள்ளனார். அதன் பின் அவர் நீண்ட நாளாக காத்திருந்தும், பாதிக்கப்பட்டவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.

அவர் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, சில நாட்களில் அவரது கணக்கில் இருந்து ரூ.6.76 லட்சம் மோசடியாகப் பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மோசடி செய்பவரின் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது, அது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. ஒரு புதிய ஐபோன் இலவசமாக கிடைக்கும் என்ற ஆசை வலையில், பாதிக்கப்பட்ட நபர் சிக்கிவிட்டார். பணம் அனுப்பியது மட்டுமின்றி அவர்கள் கேட்ட அவரது வங்கி விவரங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இதனால், அவர்களின் ஏமாற்றும் தந்திரங்களுக்கு அவர் விழுந்துவிட்டார்.

படே பாய் மோசடி

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பின் கூற்றுப்படி, ‘படே பாய்’ என்றழைக்கப்படும் இந்த வகை மோசடியில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. துபாயில் இருந்து அழைப்பவர்கள் என கூறி அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மக்கள் மொபைல் அழைப்புகளைப் பெறுகிறார்கள். ஆனால் இந்த மோசடி எப்படி நடக்கிறது மற்றும் ஸ்கேமர்கள் ஏன் குறிப்பாக நாட்டின் குறியீடு +92 உடன் தொடங்கும் மொபைல் எண்ணில் இருந்து அழைக்கிறார்கள் என்பது விசாரணையில் உள்ளது.

சரி, +92 என்று தொடங்கும் மொபைல் நம்பர் குறியீடு பாகிஸ்தான் நாட்டுக்குரியது. மேலும் இந்தியக் குடிமக்களைக் குறிவைக்க வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் மோசடி செய்பவர்கள் பற்றிய செய்திகள் வந்துள்ளன. எனினும், அழைப்பாளர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அல்ல. காவல்துறையின் கூற்றுப்படி, எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வழக்கில், எந்தவொரு பாகிஸ்தானிய நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை, மேலும் மோசடி செய்பவர்கள் ஒரு மெய்நிகர் எண்ணைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை அணுகி மோசடி செய்தனர்.

சைபர் குற்றப் புலனாய்வுத் துறையின் படி, பாகிஸ்தான் எண்களைக் கொண்ட தெரியாத நபர்களிடம் இருந்து பலருக்கு அழைப்புகள் வந்துள்ளன. இந்த மோசடி செய்பவர்கள் “படே பாய் மற்றும் சோட்டே பாய்” உரையாடலைப் பயன்படுத்தி, துபாயில் உள்ள ஒரு புகழ்பெற்ற கடையில் இருந்து அழைப்பதாக தங்கள் இலக்குகளை ஏமாற்றி, இலவச அல்லது மலிவான ஐபோனைப் பெறுவதற்காக பணம் செலுத்தும்படி ஏமாற்றுகிறார்கள். 

விர்ச்சுவல் எண்கள்

அறிமுகமில்லாதவர்களுக்கு, நாட்டின் குறியீடு “92” அல்லது வேறு ஏதேனும் குறியீட்டுடன் தொடங்கும் விர்ச்சுவல் ஃபோன் எண்களை உருவாக்குவது, இயல்பாகவே சட்டவிரோதமானதாகவோ அல்லது மோசடியானதாகவோ இருக்காது. மெய்நிகர் தொலைபேசி எண்கள் தனியுரிமை, சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக வணிகங்கள் மற்றும் தனிநபர்களால் பயன்படுத்தப்படும் முறையான கருவிகள். இருப்பினும், மோசடி செய்பவர்கள் இப்போது இந்த மெய்நிகர் தொலைபேசி எண்களை மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

இலவச இன்னபிற அல்லது இலாபகரமான சலுகைகளை வழங்கும் அழைப்புகள் மற்றும் செய்திகள் கவர்ந்திழுக்கும் போது, அவை பெரும்பாலும் மோசடியானவை. விழிப்புடனும் சந்தேகத்துடனும் இருப்பது இந்த மோசடிகளில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.