மேடையில் ஆங்கிலத்தில் பேசிய மகன் அமீன்: தமிழ்ல பேசுப்பானு சொன்ன ஏ.ஆர். ரஹ்மான்- வைரல் வீடியோ

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 20ம் தேதி கோவையில் நடந்தது. ரஹ்மான் பாடுவதை கேட்டு மகிழ ரசிகர்கள், ரசிகைகள் கூடினார்கள்.

ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda..
அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீனும் பாடினார். ரஹ்மான் தன் செல்ல மகன் அமீனை கலாய்த்த வீடியோவை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மகனை பார்த்து பயமாக இருக்கா இல்லை உற்சாகமாக இருக்கா என ரஹ்மான் கேட்க அமீன் சிரித்தார். பொண்ணுங்க எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காங்க என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதை கேட்டதும் அங்கிருந்த பெண்கள் எல்லாம் சிரித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

ரஹ்மான் கேட்ட கேள்விக்கு அமீன் ஆங்கிலத்தில் அழகாக பதில் அளித்தார். அதை கேட்ட ரஹ்மானோ, தமிழில் பேசுப்பா என கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.

ரஹ்மான் செய்த காரியத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

ரஹ்மானின் தக் லைஃப் வேற லெவலாக சென்று கொண்டிருக்கிறது. சார், உங்களுக்கு போட்டி நீங்கள் மட்டுமே என்கிறார்கள்.

முன்னதாக பத்து தல படத்தில் வந்த ராவடி பாடலை ரஹ்மான் எப்படி கம்போஸ் செய்திருப்பார் என கலாய்த்து வீடியோ வெளியிடப்பட்டது. அதை பார்த்த ரஹ்மானோ தன்னை கலாய்த்தவர்களையே பதிலுக்கு கலாய்த்து அவர்கள் செய்தது போன்றே வீடியோ வெளியிட்டார். அது எல்லாம் நிச்சயமாக வேற லெவல் தக் லைஃப் தான்.

ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ரஹ்மான் அளிக்கும் சில பதில்கள் எல்லாம் தக் லைஃபின் உச்சம் என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தான் மேடையில் மகனை கலாய்த்திருக்கிறார்.

தமிழ் என்று வந்துவிட்டால் ரஹ்மான் அப்படித் தான். முன்னதாக விருது விழா ஒன்றில் மேடைக்கு வந்த தன் மனைவி சாய்ரா பேசத் துவங்கும் முன்பே இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்கள் என்று கூறினார். தற்போதை மகனையும் தமிழில் பேசச் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சிறுமியாக இருந்தபோது மேடையில் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க அவர் அருகில் நின்ற கமல் ஹாசனோ அவரை தமிழில் பேசச் சொன்னார். அதை கேட்ட ஸ்ருதி டாமில் என்று கூற, டாமில் இல்ல தமிழ் என கமல் ஹாசன் திருத்தியது பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கோவை நிகழ்ச்சி வீடியோவை பார்த்த ரசிகர்களோ சென்னை நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது.

ரஹ்மானின் இசை மழையில் நனைய ஆசைப்பட்டு வந்தவர்கள் நிஜ மழையில் சிக்கிக் கொண்டார்கள். சென்னையில் பெய்த கனமழையால் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் நீர் தேங்கியது. இதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ரஹ்மான் ட்வீட் செய்தார்.

AR Rahman: இந்த அரசு செய்து கொடுக்கும்: ஏ.ஆர். ரஹ்மான் கோரிக்கையை ஏற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதை பார்த்து இசை பிரியர்கள் வருத்தப்பட்டார்கள். நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்த சிலருக்கு பதில் அளித்தார் ரஹ்மான்.

மதுரையில் இருந்து சென்னை வந்து இப்படியாகிவிட்டதே என ஒருவர் கதறி அழுத வீடியோவை போட அதை பார்த்த ரஹ்மானோ, கலை நிகழ்ச்சிகளை சென்னையில் நடத்த நம் அரசு உதவியுடன் உலகத் தரம் வாய்ந்த கட்டிடம் கட்டப்படும் என நம்புவதாக, பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

யோகிகள் காலில் விழுவது என் வழக்கம், அதை தான் செய்தேன்: ரஜினி

ரஹ்மானின் ட்வீட்டை பார்த்த முதல்வர் ஸ்டாலினோ, விரைவில் அது நடக்கும் என உறுதி அளித்து பதில் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.