குவைத் நாட்டில் செப்டம்பர் 1 முதல் மாற்றம்… பகல்நேர வேலையும், ஊழியர்கள் எதிர்பார்ப்பும்!

குவைத் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பொதுவெளியில் வேலை செய்யும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பலர் உடல்நலக் குறைவிற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் நடைபெறும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

BBA படிச்சவங்களுக்கு நல்ல சம்பளத்தில் வெளிநாட்டு வேலைகள் ரெடியா இருக்கு!

திறந்தவெளி பணிகளுக்கு தடை

அதேசமயம் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் எஞ்சிய நேரங்களில் பணிகளை மேற்கொள்ளலாம். இந்த தடை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுடன் குவைத் அரசு விதித்திருந்த தடை முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் குவைத் நாட்டில் நிலவி வந்த கடுமையான வெப்பம் பெரிதும் தணிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத் நாட்டில் ரெடியாகும் மெகா பயோமெட்ரிக் டேட்டாபேஸ்… கைரேகை கொடுத்த 10 லட்சம் பேர்!

மீண்டும் இயல்புநிலை

இதற்கேற்ப அரசின் தடையும் முடிவுக்கு வந்திருப்பதால் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த சூழலில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது, மூன்று மாத தடை காலத்தில் அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுகளில் ஈடுபட்டனர். அதில் 362 இடங்களில் விதிகளை மீறி நடந்துள்ளனர். அதாவது தடை விதிக்கப்பட்ட 11 – 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் திறந்தவெளியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

ஊழியர்கள் கோரிக்கை

இந்நிலையில் ஊழியர்கள் சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். குடிநீர், முதலுதவி பெட்டி, மருத்துவ வசதி, ஓய்வறை, கூடுதல் வேலைக்கு ஏற்ப படித்தொகை போன்ற விஷயங்களை நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். இதற்கு அரசு முறையான உத்தரவு பிறப்பித்து அவ்வப்போது கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

செப்டம்பர் சம்பவம்… குவைத் நாட்டில் நிகழும் வானிலை மாற்றங்கள்… வெளியான சுவாரஸிய தகவல்!

சட்டவிரோத குடியிருப்புகள்

இதுதவிர மற்றொரு பிரச்சினை குவைத் நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு தரப்பு பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 100 பேர் சட்டவிரோத குடியேற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடு கடத்த ஏற்பாடு

அவர்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைத்து அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தை எடுத்து கொண்டால் 25 ஆயிரம் பேர் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக வெளிநாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.