கௌதம சிகாமணி -சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய நீதிபதி!

2006 – 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். கனிமவளத்துறையும் அவர் வசமே இருந்தது.

2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை பொன்முடி, அவரது மகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.

2006-11ஆம் ஆண்டில் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் அவரது உறவினர்கள் அளவுக்கு அதிகமாக குவாரிகளில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டவர்கள் மீது இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.

விழுப்புரத்தைச் சேர்ந்த சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் அமைச்சர் பொன்முடி புகழாரம்

இதனை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கௌதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கௌதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கு செப்டம்பர் 11ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என சென்று தற்போது தலைமை நீதிபதி விசாரணைக்கு சென்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.