பாஜகவை 'இந்தியா' கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும் – ராகுல் காந்தி

மும்பை,

இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,

இன்று, இரண்டு பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மேடையில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால், தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமில்லை. மிகவும் திறமையான முறையில் ஒன்றிணைவதே எங்கள் முன் உள்ள பணி. .பிரதமருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் இடையேயான தொடர்பை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்.

இந்திய கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும் என்று நான் நம்புகிறேன்.தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம் . பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.நமது எல்லை பகுதியை தங்களுடன் இணைத்து சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது .ஜி 20 மாநாடு நடக்கும் நிலையில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் . என தெரிவித்தார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.