தமிழக அரசு அசத்தல் பிளான்: 1500 குடும்பங்களுக்கு வீடு – நிதி ஒதுக்கீடு.. பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தகுதியின் அடிப்படையில் 1500 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அப்போது, “பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு வீடுகள் ரூ.45.00 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் கட்டித் தரப்படும்” என்று கூறியிருந்தார்.

தேனியில் தாசில்தாரின் பணியிடை நீக்கம் உத்தரவை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-2024ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 பழங்குடியினர்களுக்கு தமிழ்நாட்டில், 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 1500 வீடுகளை விரைந்து கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.