vijay about rajini: தலைவருக்கு தில்லு அதிகம்..ரஜினியின் தைரியத்தை பார்த்து மெர்சலான விஜய்…ஒரு குட்டி பிளாஷ்பாக்..!

ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தான் யார் என நிரூபித்துவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றதும் அவரின் மீது ஒரு சில விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக ரஜினியின் கடைசி இரு படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

இனி ரஜினியின் படங்கள் ஓடாது, அவருக்கு வயதாகிவிட்டது என்றெல்லாம் ஒரு சிலர் பேசினார்கள். ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் ரஜினி ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தரமான பதிலடி கொடுத்துள்ளார். நெல்சனின் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

வெற்றிப்பாதையில் ரஜினி

இவ்வெற்றியின் மூலம் ரஜினி தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என நிரூபித்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு முன்பு ரஜினி இதே போல ஒரு தரமான காம்பாக் ஒன்றையு கொடுத்துள்ளார். அதாவது பாபா திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் பலரும் ரஜினியை விமர்சித்தார்கள். மேலும் ரஜினி பாபா படத்திற்க்கு பிறகு இனி நடிக்கமாட்டார் என்றெல்லாம் பேசினார்கள்.

Jailer: ரஜினியின் ஜெயிலர் படத்தினால் கலாநிதி மாறனுக்கு இத்தனை கோடி லாபமா ?அடேங்கப்பா..!

ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து சந்திரமுகி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ரஜினி. 2005 ஆம் ஆண்டு வெளியான அப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. P .வாசுவின் இயக்கத்தில் பிரபுவின் தயாரிப்பில் வெளியான இப்படம் தாறுமாறு ஹிட்டடித்தது. மேலும் தமிழில் அதிக நாட்கள் ஓடிய படங்களில் ஒன்றாக சந்திரமுகி உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, நான் யானை இல்லை குதிரை, யானை தான் விழுந்தால் எழுந்திருக்க தாமதமாகும். நான் குதிரை, டக்குனு எழுந்திருப்பேன் என்றார். அதே போல பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி அவ்வளவு தான் என பேசியவர்களுக்கு சந்திரமுகி வெற்றியின் மேலும் பதிலடி கொடுத்தார் ரஜினி.

தலைவரின் தில்

இதையடுத்து சந்திரமுகி படம் வெளியாகும் முன்னரே ரஜினி அப்படத்தின் மீதான நம்பிக்கையில் செம தில்லாக மேடையில் பேசினார். இதைப்பார்த்த விஜய், தலைவருக்கு தைரியம் ஜாஸ்தி என சொன்னாராம். இதனை சந்திரமுகி படத்தின் இயக்குனர் P .வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் ரஜினியால் ஒரு படம் வெற்றிபெற முடியுமா ? இல்லையா ? என்பதை சுலபமாக கணிக்கமுடியும். அதனை நான் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பார்த்தேன். ரஜினி ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை பார்த்து கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதை உணர்ந்தேன் என்றார் இயக்குனர் வாசு என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.