அப்போ காவிரியில் தண்ணீர் வந்திடும்.. சூடுபிடித்த பருவமழை.. சூப்பர் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்!

ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தென் மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழைதென் மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக வடமாநிலங்கன் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பரவியது. கேரளாவில் தாமதமாக தொடங்கிய பருவமழை வட மாநிலங்களுக்கு வேகமாக பரவியது. இதனால் வழக்கத்தை விட முன்னதாகவே வட மாநிலங்களில் பருவமழை தொடங்கியது.பெரும் சேதம்பருவமழையின் தொடக்கத்திலேயே அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயலால் வட மாநிலங்களுக்கு கூடுதலாக மழைப்பொழிவு கிடைத்தது. கடந்த 3 மாதங்களில் இமாச்சல், உத்தரகாண்ட், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து பெரும் பொருட் சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியது.
​ நிலவை சேதப்படுத்திய ரஷ்யாவின் லூனா 25… நாசா வெளியிட்ட பகீர் தகவல்!​மோசமான ஆகஸ்ட்
இருப்பினும் பருவமழையின் 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய சராசரி மழைப்பொழிவு கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் வறண்ட மாதமாக இருந்தாகவும் 122 ஆண்டுகளுக்கு பிறகு படுமோசமான மழை அளவை பெற்றது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

புத்துயிர் பெற்ற பருவமழைதென் மேற்கு பருவமழை இந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் என்பதால் இந்த மாதமாவது மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் செப்டம்பர் மாதம் பரவலாக நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் கூறியது. செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் புத்துயிர் பெறும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியது.
​ ஆதித்யாவுடன் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி… பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!​4 மாநிலங்களில் கனமழைஅதன்படியே தென் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் 4 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ உயிரோடு இருக்கிறாரா வாக்கனர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின்… வீடியோவால் பரபரப்பு!​கர்நாடகாவில் கனமழைகர்நாடக மாநிலத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல் ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ ‘வெடிச்சு சிதறிடுவேன்’ விஜயலட்சுமி விவகாரத்தால் ஆவேசம்… வீடியோ வெளியிட்டு வெகுண்ட சீமான்!​தெலுங்கானாவில் கொட்டித் தீர்க்கும்தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட மாநிலங்கள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ பிரமிக்க வைக்கும் தமிழர்கள்… உலக நாடுகளை ஆட்சி செய்யும் இந்திய வம்சாவழியினர்!​தமிழகத்திலும் மழைஇதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பல இடங்களில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் இந்த மழை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ஹரியானா, சண்டிகர், மேற்கு ராஜஸ்தான் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் விதிவிலக்காக இருக்கும் என்றும் இந்த பகுதிகளில் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.​ ஆதித்யாவுடன் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி… பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.