பி.எல்.சந்தோஷ்: என்னது 50 எம்.எல்.ஏக்கள் டீலிங்கா? கொஞ்சம் பாஜகவை பாருங்க… காங்கிரஸ் விட்ட பளார்!

பி.எல்.சந்தோஷ்… இந்த பெயரை கேட்டதும் பாஜகவின் நம்பர் 3, தெற்கின் மாஸ்டர் மைண்ட், அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவதில் வல்லவர், பின்னணி ஆபரேசன் செயல்பாடுகளில் கில்லாடி, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குரு போன்ற விஷயங்கள் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு உடனடியாக தோன்றும்.

பி.எல்.சந்தோஷ் களப்பணிஆர்.எஸ்.எஸ் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருக்கிறார். கட்சி, ஆட்சியில் புதிய மாற்றங்களுக்கு வித்திட்டவர். சமீபத்தில் நடந்த கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் பி.எல்.சந்தோஷின் வியூகங்கள் எதுவும் எடுபடவில்லை. இருப்பினும் சோர்வடையாது 2024 மக்களவை தேர்தலுக்காக கட்சியினரை தயார்படுத்தி வருகிறார். இதையொட்டி அவ்வப்போது நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து முக்கியமான சில ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கிறார்.காங்கிரஸ் vs பாஜக மோதல்இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து மேலவை உறுப்பினராக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருக்கும், பி.எல்.சந்தோஷிற்கும் இடையில் வார்த்தை போர் வெடித்துள்ளது. முன்னதாக பெங்களூருவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
50 எம்.எல்.ஏக்கள் பேச்சுவார்த்தைஅதில், சில முக்கியமான விஷயங்கள் பி.எல்.சந்தோஷ் காதுகளுக்கு எட்டியது. அதாவது, பாஜக எம்.எல்.ஏக்களை பேரம் பேசி அபகரிக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், எங்களாலும் எம்.எல்.ஏக்களை வளைக்க முடியும். தற்போது 40 முதல் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எங்களுடன் பேசி வருகின்றனர்.
கூட்டத்திற்கு தலைவர்கள் ஆப்சென்ட்ஒருநாள் ஆட்சி மாற்றம் நிகழவும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். இதை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி என்று கர்நாடகா காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. பாஜக நடத்திய கூட்டத்திற்கு பல முக்கிய தலைவர்கள் வரவில்லை. இதுதொடர்பான லிஸ்ட் எடுத்தால் சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, சோமன்னா, எஸ்.டி.சோமசேகர், எடியூரப்பா, சங்கர் பட்டில் முனேனாகொப்பா, சிவராம் ஹெப்பர், ரேனுகாச்சரியா என சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
​எடியூரப்பா பின்னால் கர்நாடகா பாஜகஅனைத்து பாஜக எம்.எல்.ஏக்களும் எடியூரப்பா பின்னால் நிற்கின்றனர். ஆனால் நான் தான் தலைவர் என்ற வகையில் பி.எல்.சந்தோஷ் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனால் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படவில்லை. மாநில பாஜக தலைவர் நியமிக்கப்படவில்லை. இதில் கவனம் செலுத்துங்கள். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி பக்கம் திரும்பலாம் என்று கிண்டல் அடித்துள்ளனர்.
மூழ்கும் பாஜகஇந்நிலையில் பி.எல்.சந்தோஷ் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மூழ்கி கொண்டிருக்கிறது. இதற்கு காரணமாக பல ஆண்டுகளாக அக்கட்சிக்கு உழைத்த பி.எல்.சந்தோஷ் போன்ற மூத்த தலைவர்கள் தான். முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றுங்கள். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கர்நாடகா பாஜகவில் பூசல் நிலவுவதை பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சி தலைவர் நியமனம் என்ற கேள்வி தான் பெரிதாக ஒலிக்க தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.