விநாயகர் சதுர்த்தி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – என்னென்ன கட்டுப்பாடுகள்?

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதியளிக்கப்படும்.
விநாயகர் சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
கரூர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு – இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலை தயாரிக்க, பந்தல் அலங்கரிக்க பயன்படுத்தலாம்.
சிலைகள் மீது செயற்கை சாயம் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.