ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்த போது வெளிநாடு செல்வதில் பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும், தமிழ்நாடு எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது.