மக்களின் வறுமையை ஒழிக்கும் தேசிய பணிக்கு பங்களிப்பு வழங்கும் இலங்கை சதொச நிறுவனம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இன்று (20) முதல் 6 வகையான அத்தியாசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதற்கமைய, சோயா மீட் (மொத்த விலை) ஒரு கிலோ கிராம் 45 ரூபாவால் கறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.
உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 290 ரூபாவாகும்.
நெத்தோலி ஒரு கிலோ கிராம் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 110 ரூபாவாகும்.
பூண்டு ஒரு கிலோ கிராம் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 620 ரூபாவாகும்.
பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.
சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
இதற்கமைய, விலை குறைக்கப்பட்ட இந்த 6 வகையான அத்தியாவசியப் பொருட்களையும், நாட்டில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களினூடாகவும் வாடிக்கையாளர்கள், இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.