டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் அதாவது 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றைய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் இது புயலாக உருவெடுத்தது. […]