17 people who ate biryani on the first day got sick | முதல் நாள் பிரியாணியை சாப்பிட்ட 17 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

சிக்கமகளூரு : சிக்கமகளூரில் மறவஞ்சி கிராமத்தில் பிரியாணி சாப்பிட்ட 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சிக்கமகளூரு மாவட்டம், கடூரின் மறவங்சி கிராமத்தில், நேற்று முன்தினம் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தது. இதில், உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

இதற்காக வீட்டிலேயே பிரியாணி தயாரிக்கப்பட்டிருந்தது.

மறுநாளான நேற்று உறவினர்கள் சிலர், முதல் நாள் பிரியாணியை சூடு செய்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது.

இதனால் அவர்களை, கிராமத்தினர் கடூர் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதால், அபாய கட்டத்தில் இருந்து தப்பினர். பாதிக்கப்பட்ட எட்டு ஆண்கள், ஒன்பது ஆண்கள் என 17 பேரை, கடூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆனந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.