புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி

ஜெய்ப்பூர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.மும்பையில் நடந்து வந்த லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், அடுத்த சுற்று ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது .

இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 38- 35 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.