வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் விதமாக நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் 52.5 சதவீதம் ஆதரவு பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அதேவேளை, 46.6 சதவீதம் ஆதரவு பெற்று நிக்கி ஹாலே 2ம் இடம் பிடித்தார். இது டிரம்புக்கு முதல் வெற்றியாக கருதப்படும் நிலையில், நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement