கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாகக் கூறி, நடிகை சோனாக்ஷி சின்ஹா உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரமோத் சர்மா என்பவரிடம் ரூ.25 லட்சம் வாங்கியிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தை சோனாக்ஷி சின்ஹாவின் மேலாளர் மால்விகா, டோமில் தக்கர் மற்றும் சகாரியா ஆகியோர் பேசி முடித்தனர். ஆனால் சொன்னபடி நிகழ்ச்சியில் சோனாக்ஷி சின்ஹா பங்கேற்கவில்லை. இதனால் பிரமோத் சர்மாவிற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. வாங்கிய பணத்தையாவது திரும்பக் கொடுக்கும்படி சோனாக்ஷியிடம் பிரமோத் சர்மா கேட்டுக்கொண்டார்.
ஆனால் பணத்தை சோனாக்ஷி சின்ஹா கொடுக்க மறுத்தார். இது தொடர்பாக சோனாக்ஷி சின்ஹா, அவர் மேலாளர்கள் உட்பட 4 பேர்மீது உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் அருகில் உள்ள கட்கர் காவல் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பிரமோத் சர்மா புகார் செய்தார்.
இது தொடர்பான வழக்கு மொரதாபாத் கோர்ட்டில் விசாரிக்கபட்டு வருகிறது. சோனாக்ஷி சின்ஹாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு விசாரணைக்கு இம்மாதம் 28-ம் தேதி வரை சோனாக்ஷி சின்ஹா உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி வைத்திருக்கிறார். இதனால் மற்ற மூன்று பேருக்கும் எதிராக மொரதாபாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜராகும்படி கோர்ட் பல முறை சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து மூன்று பேரையும் கோர்ட் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, உத்தரவிட்டிருக்கிறது. அதோடு அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்யும்படி நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
கோர்ட் உத்தரவால் சோனாக்ஷி சின்ஹாவிற்கும் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY