சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று தமிழ்நாட்டின் 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்பட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் முன்பு கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து, அதில் இருந்த ஜமேஷா முபின் என்ற […]