சென்னை: சென்னை கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் இன்று ( பிப்.18 ) மாற்றம் செய்யப்பட உள்ளது. மொத்தம் 44 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 நண்பகல் 12,00, 12.10, 12.20, 12.40, மதியம் 1.15, 1.30, 2.00, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதே போல, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று காலை 11.00, பகல் 11.50, 12.30, 12.50, மதியம் 1.45,பிற்பகல் 2.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், சென்னை கடற்கரை – அரக்கோணத்துக்கு இன்று மதியம் 1.00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இன்று காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.00, 12.15, 12.45 மதியம் 1.30, 1.45, பிற்பகல் 2.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
அதேபோல, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையேஇன்று காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12.00, மதியம் 1.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.
இதுதவிர, காஞ்சிபுரம் – சென்னை கடற்கரைக்கு இன்று காலை 9.30 மணிக்கு இயக்கப்படும மின்சார ரயில், திருமால்பூர் – சென்னை கடற்கரைக்கு இன்று முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இத்தகவலை சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
22 வரை ரயில் சேவையில் மாற்றம்: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகாரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் பிப்.18-ம் தேதி முதல் பிப்.22-ம்தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு பிப்.19, 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 8.15, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு பிப்.18-ம் தேதி இரவு 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு பிப்.19, 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.20, 11.40ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு பிப்.19, 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு பிப்.18-ம் தேதி இரவு 11.15, 11.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு பிப்.18-ம் தேதி இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எழும்பூர் – கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.