India vs England: ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய இந்தியா அணி 445 ரன்கள் குடித்தது. பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்பு 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் அதிரடி காட்டினர். 3-வது நாளான நேற்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த தொடரில் மீண்டும் ஒரு சதம் அடித்து அசத்தி உள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அவுட் ஆனாலும், ஜெய்ஸ்வால் மற்றும் கில் இணைந்து சிறப்பாக விளையாடினர். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
A leap of joy to celebrate his second century of the series
Well played, Yashasvi Jaiswal #TeamIndia | #INDvENG | @ybj_19 | @IDFCFIRSTBank pic.twitter.com/pdlPhn5e3N
— BCCI (@BCCI) February 17, 2024
இருப்பினும், சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 104 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டையர்ட் ஆகி வெளியேறினார். இருப்பினும், இப்போது ரசிகர்கள் மத்தியில் உள்ள கேள்வி என்னவென்றால், ஜெய்ஸ்வால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியுமா என்பதுதான். ரிட்டையர்ட் ஆகி வெளியேறி உள்ள ஜெய்ஸ்வால் இன்னும் அவுட் ஆகவில்லை என்பதால், அவர் மீண்டும் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் இன்று மீண்டும் பேட்டிங் செய்யலாம். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியை வெற்றி பெற இந்தியா நிக்கு மிகப்பெரிய இலக்கு தேவை. இதனால் அவர் நிச்சயம் மீண்டும் பேட்டிங் செய்யவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறிய அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவர் எப்போது மீண்டும் வருவார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை. அஸ்வினின் தாயார் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதால் போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஒருவேளை அஸ்வின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால், இந்திய அணிக்கு பெரிய இழப்பு ஏற்படும். அஸ்வின் விலகிய நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 4 பவுலர்களை வைத்து மட்டுமே விளையாடியது. இதனை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக மதிய உணவுக்கு பிறகு ஒரு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
அதே போல, குல்தீப் யாதவ் தனது சிறப்பான பந்துவீச்சால் இரண்டு முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இங்கிலாந்து வெறும் 95 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது கில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து உள்ளார். இந்தியா 196 ரன்கள் அடித்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய இழக்கை செட் செய்யும் நிலையில், இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெற முடியும்.