“60,000 அல்ல… 10,600 பேருக்குதான் இதுவரை அரசு வேலை!” – அண்ணாமலை சாடல் @ தமிழக பட்ஜெட் 2024

சென்னை: “கல்விக் கடன் ரத்து, கோவிட் தொற்று காலத்தில் பாதிப்படைந்த தொழில்முனைவோர்களுக்கு இழப்பீடு, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாணவ மாணவியருக்கு 4G, 5G டேப்லட், மீனவப் பெருமக்களுக்கு 2 லட்சம் வீடுகள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இன்று வெளியிட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுவரை கொடுத்துள்ள அரசு வேலைகள் எண்ணிக்கை 10,600 மட்டுமே. ஆனால், 60,000 பேருக்கு அரசு வேலை கொடுத்திருப்பதாகப் பொய் கூறுகிறார்கள்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: “இன்றைய ‘என் மண் என் மக்கள்’ பயணம், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவு நிறைந்திருக்கும் தொகுதியான செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில், மறைமலை அடிகளாரின் பெயர் கொண்ட மறைமலை நகரில், பொதுமக்கள் பேராதரவுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது மாணவி பிரசித்தி சிங், 8 வகையான சிறிய பழமரங்கள் கொண்ட வனத்தை உருவாக்கி, 9000 மரங்களுக்கு மேல் நட்டுள்ளார். இந்தச் சாதனையை இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இளம் சாதனையாளருக்கு, பிரதமர் மோடி கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.