மும்பை : பிரபல ஹிந்தி நடிகர் ரிதுராஜ் சிங், 59, நேற்று மாரடைப்பால் காலமானார். இவர், பத்ரிநாத் கி துல்ஹானியா உள்ளிட்ட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அனுபமா என்ற தொலைக்காட்சி தொடர் வாயிலாக பிரபலமானவர். தமிழில் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்துள்ளார்.
ரிதுராஜ் சிங்குக்கு சில நாட்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மரணம் அடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement