`என்னை தான் திருமணம் செய்ய வேண்டும்!’ – டிவி தொகுப்பாளரை ஆள் வைத்து கடத்திய பெண் தொழிலதிபர்

ஐதராபாத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருபவர் திரிஷ்னா(31). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரிமோனியல் தளத்தில் டிவி தொகுப்பாளர் பிரணவ் என்பவர் குறித்த தகவல்களை பார்த்திருக்கிறார். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்து அவருடன் சாட்டிங் செய்ய ஆரம்பித்தார். இந்த பழக்கம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்திருக்கிறது. இந்த பழக்கத்தில் திரிஷ்னாவிடம் தொழில் நிமித்தமாக பணம் வாங்கி இருக்கிறார். ஆனால் பின்னர்தான் சைதன்ய ரெட்டி என்பவர்தான் டி.வி.தொகுப்பாளர் புகைப்படத்தை தனது மெட்ரிமோனியல் புரொபைல் புகைப்படமாக வைத்து தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட டிவி தொகுப்பாளர் பிரணவை திரிஷ்னா தேடி கண்டுபிடித்து அவரது நம்பரையும் வாங்கி அவரை தொடர்பு கொண்டார்.

உடனே அந்த டிவி தொகுப்பாளர் பிரணவ் ஏற்கனவே தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்திருப்பதாக திரிஷ்னாவிடம் தெரிவித்தார். அப்படி இருந்தும் டிவி தொகுப்பாளரையே திருமணம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் திருஷ்னா அடிக்கடி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியும் போனில் தொடர்பும் கொண்டும் இருந்தார். இதனால் திரிஷ்னாவின் நம்பரை டிவி தொகுப்பாளர் பிளாக் பண்ணிவிட்டார்.

உடனே கோபம் அடைந்த திரிஷ்னா டிவி தொகுப்பாளரின் காரில் அவருக்கு தெரியாமல் அவரது கார் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்கும் கருவியை பொருத்தி அவர் எங்கு செல்கிறார் என்ற விபரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தார். அதோடு அவரை கடத்திச்சென்று திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிடலாம் என்று கருதி தனது அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேரை நியமித்து அவர்களுக்கு 50 ஆயிரம் பணம் தருவதாக கூறி டிவி தொகுப்பாளரை கடத்துவதற்காக அனுப்பி வைத்தார்.

கடத்தல்,

அவர்கள் திரிஷ்னாவின் துணையோடு டிவி தொகுப்பாளரை அப்பெண்ணின் அலுவலகத்திற்கு கடத்திச்சென்றனர். அங்கு வைத்து திரிஷ்னா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால் டிவி தொகுப்பாளர் மறுத்ததால் அவரை அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, இனி திரிஷ்னாவின் போன் கால்களை எடுத்து பேசுவதாக சொல்லி அங்கிருந்து தப்பித்து வந்து டிவி தொகுப்பாளர் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து திரிஷ்னா மற்றும் அவரது ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திரிஷ்னாவிடமிருந்து ஐபோன் மற்றும் டிவி தொகுப்பாளர் காரை கண்காணிக்க பொருத்தி இருந்த ஆப்பிள் ஏர்டேக் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.