நாடு இருந்ததை விட சிறந்த நிலையில் உள்ளது – எதிர்காலத்தில் மேலும் சிறந்து விளங்க நாம் பாடுபடுவோம்

நமது நாட்டின் நிலமை இருந்ததை விட சிறந்து விளங்குவதாகவும், எதிர்கால நிலமைகளை மேலும் சிறப்படையச் செய்வதற்காக நாம் கடினமாக பாடுபட இந்த விடயம் பேசுவதற்கு இலகுவானது வேண்டும் என்றும்; அமைச்சரவைப் பேச்சாளருமான வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்விக்கு ஏற்ற விநியோகத்தை வழங்குவதற்கு போதுமான பஸ் வண்டிகள் போதாது இருப்பதாக தெரிவித்த அமைச்சர், கடந்த வருடத்தில் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பாவனைக்கு உதவாது அகற்றப்பட்ட 900 பஸ்கள் திருத்தப்பட்டுள்ளதுடன், தற்போது 200 மின்சார பஸ்கள் மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்கான வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் 500 பஸ்களை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், ஆயிரம் புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் விவரித்தார்.

நீண்டகால பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்தில் உடனடி தீர்வுகளை வழங்க முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் முன்பிருந்ததை விட சிறந்த நிலை தற்போது காணப்படுவதை அவதானிப்பதாகவும் குறிப்பிட்டார். இது சிறந்த நிலை அல்ல என்பதுடன் நாம் பெற்றுள்ள கடனை மீள செலுத்தாத வரை இது பாரிய பிரச்சினை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் இதன் காரணமாக ஆயிரம் பஸ்களை பெற்றுக் கொள்வதற்கு பாரிய நீண்டகால முதலீடு அவசியம் என்றும் தெளிவு படுத்தினார் .

பிரதான அரச வங்கிகள் ஒன்றிலாவது அக்கடன் நிதியை பெற்றுக் கொள்ள முடியாது இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த விடயம் பேசும் அளவு இலகுவானது அல்ல என்றும் அதற்கு தீர்வு காண்பது மிக அவசியம் என்றும் விவரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.