சென்னை: மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உலகமே தற்போது தன்னுடைய பாதைகளை வகுத்து வருகிறது. தற்போது ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜன்ஸ் என்ற AI தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. கணினி தொழில்நுட்பத்தின் கொடையான இந்த செயற்கை நுண்ணறிவு அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிய தன்னடைய பயணத்தை முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம் பல்வேறு துறையினரும் பல சாத்தியமற்ற விஷயங்களை செய்து வருகின்றனர்.