நாட்டின் 100 கல்வி வலயங்களுக்குக் கீழ் வரும் 7, 902 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.08மில்லியன் தொகையான சகல பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக “பாடசாலைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி”த்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், ஒரு மாணவருக்காக ஒரு நாளைக்கு ஒரு உணவுக்காக 85/- ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்தையில் காணப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளின் அதிகரிப்பிற்கிணங்க ஒரு உணவிற்காக குறைந்தது 110/- பெறுமதியான நிதி செலவிடப்படுவதாகவும் இது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுவினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவ்வாறே “பாடசாலை நிகழ்ச்சித் திட்டம்” இற்காக சேவ் த சில்ட்ரன் அமைப்பின் ஊடாக 2024ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட 917 பாடசாலைகளின் 2 இலட்சம் மாணவர்களுக்கு 03 உணவு வகைகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, தலா ஒரு உணவுக்காக மாணவருக்கு 110/- ரூபா வரை நிதியை அதிகரிப்பதற்கும், ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான 2024ஆம் ஆண்டில் 170 பாடசாலை நாட்களுக்காக “பாடசாலை உணவ நிகழ்ச்சித் திட்டத்தை” நடைமுறைப்படத்துவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.