வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியன திடீரென முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் கணக்கு வைத்து தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்த இரு செயலிகளும் 45 நிமிடங்கள் முடங்கின. இதனால் உலகம் முழுதும் உள்ள நெட்டிசன்கள் இரு செயலிகளையும் பயன்படுத்த முடியவில்லை என புகார் தெரிவித்தனர்.
மேலும் செங்கடல் வழியாக செல்லும் டேட்டா கேபிள் 4 இடங்களில் வெட்டி துண்டிக்கப்பட்டதன் காரணமாகவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உலக அளவில் முடங்கியதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதனிடையே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம் காரணமாக எக்ஸ் வலை தள பக்கம் சென்ற நெட்டிசன்களை கலாய்த்துள்ள எக்ஸ் வலை தளம் ‘ நீங்கள் எல்லாம் ஏன் இங்க வந்திருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியும் என கலாய்த்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement