வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரோம்: இத்தாலி சென்ற பாகிஸ்தானை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர், சக வீராங்கனையின் பணத்தை திருடி விட்டு தலைமறைவான சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அந்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் இத்தாலி சென்றுள்ளனர். அவர்களில் ஜோஹைப் ரஷீத்தும் ஒருவர். இவர், கடந்த ஆண்டு நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷில் தொடரில் வெண்கலம் வென்றவர். வளர்ந்து வரும் இளம் திறமைசாலிகளில் இவரும் ஒருவர் என பலரும் பாராட்டி உள்ளனர்.
இத்தாலியில் அனைவரும் ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளனர். லாரா இக்ரம் என்ற வீராங்கனை பயிற்சிக்காக அறையை பூட்டிவிட்டு சென்றார். அவருக்கு தெரியாமல் சாவியை எடுத்த ஜோஹைப் ரஷீத், அறையை திறந்து வெளிநாட்டு கரன்சியை திருடிச் சென்றார். அவர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பவில்லை. இந்த திருட்டை பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பும் உறுதி செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement