முட்டைகளுக்கான அதிகூடிய சில்லறை விலையை அறிவிக்கும் வரத்தமானியை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட்ட விலை உள்ளடக்கிய யோசனை இந்த வாரத்தினுள் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சமர்ப்பிப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீமானித்துள்ளது.
தற்போது சந்தையில் முட்டைகளின் விலை அதிகரிப்புத் தொடர்பாக மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (05) விவசாய அமைச்சில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
முட்டையொன்றை உற்பத்தி செய்வதற்காக 30 ரூபா மாத்திரமே செலவு ஏற்படுவதாகவும், தற்போது நாட்டில் முட்டை உற்பத்தி 5.8 மில்லியன் என்றும், 7.5 மில்லியன் முட்டைக்கான நுகர்வுத் தேவை காணப்படுவதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
முட்டையொன்றிற்கான உற்பத்திச் செலவு 30ரூபாய் என்றால் அதனை சந்தையில் விற்பனை செய்வதற்கு ஆகக் கூடுதலாக 60 ரூபா வரையான மட்டத்தில் காணப்படுவதை நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், அதனால் முட்டைக்காக ஏற்படுத்தப்படுவுள்ள அதிகூடிய சில்லறை விலையை முட்டை உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் சில்லரை வியாபாரி ஆகியோரைப் பாதுகாக்கும் விதமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறே முட்டை விலை எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகூடிய சில்லறை விலையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றதாக அதி கூடிய சில்லறை விலையைத் தீர்மானிக்கும் பொறுப்பு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் கால்நடை அபிவிருத்திப் பிரிவு என்பவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன சில்வா, அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி மற்றும் கால்நடை வளர்ப்பு அபிவிருத்திப் பிரிவின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.