2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின விழா..

2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின விழா நாளை மார்ச் மாதம் 8ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வின் பங்கு பற்றுதல் உடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு கலாசார நிகழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நாட்டின் நுண்நிதி கடன்களால் சுமையாக இருக்கும் பெண்களுக்கான விசேட நிகழ்ச்சியும் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.